அ……………க ஒரு கவிதை :-1 (ஆகஸ்டு -2012 மூன்றாவது வாரம்.)
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
யோசிக்காமல் சொன்னேன்
காதல் வந்தால் கவிதை தானாய் வரும் என்பார்கள்
கவிதையே காதலியாய் வந்திருக்கிறதே!
“இதுதான் காதல் கவிதையோ?”
அ……………க ஒரு கவிதை :-2 (ஆகஸ்டு -2012 நான்காவது வாரம் திங்கள்கிழமை )
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
வார்த்தைகளுக்குள் தொடங்கியது போட்டி
வார்த்தை வெளிவரவில்லை
நான் நீ என்று
போட்டி போட்ட வார்த்தைகள்
திக்கி திணறின,
மௌனமாய் மனதிற்குள்ளேயே
உன் பெயரை மட்டும் உச்சரித்தேன்………..
அ……………க ஒரு கவிதை :-3 (ஆகஸ்டு -2012 நான்காவது வாரம் புதன்கிழமை )
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
வேகமெடுத்தன………
என் சிந்தனைகள்
சிந்தனை எல்லாவற்றிலும்
நீயே இருப்பதால்
கவிதை வரவில்லை
புன்னகையே வந்தது!!!
இப்படிக்கு
மு.வெ.ரா…
திருநெல்வேலியிலிருந்து…****